எடப்பாடி தொடுத்த வழக்கு.."கிடுக்குப்பிடியில் சிக்கிய தேர்தல் ஆணையம்".. டெல்லியில் இன்று விசாரணை..!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி சமர்பித்ததை அங்கீகரிக்க வேண்டும் என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என உச்சநீதிமன்றம் வரை சென்ற ஓபிஎஸ் தோல்வியையே தழுவினார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அவர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் தற்பொழுது வரை ஏற்கவில்லை. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுக்குழு தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும் ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எதிர் தரப்பினர் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் மனுக்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் கடைசி அஸ்திரமாக இந்திய தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்மானங்களை ஏற்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை அங்கீகரிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்கானது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் ஓபிஎஸ் வகிக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி பறிபோவதோடு அவருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS filed case will be heard in Delhi High Court today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->