காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா..? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா..? எடப்பாடி பழனிசாமி தாக்கு..! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:

இதே திருச்சியில் நேற்று முன்தினம் திமுக மாநாடு நடைபெற்றது. அப்போது தே.ஜ.கூட்டணி குறித்து முதலமைச்சர் விமர்சனம் செய்ததை குறிப்பிட்டு பேசினார்.

அதாவது இது வெற்றிக் கூட்டணி, அருமையான கூட்டணி. பல்வேறு வார்த்தைப் போருக்கு இடையில்தான் காங்கிரஸும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளன என்று குறிப்பிட்டதோடு, கெஞ்சி, அடிமையாகி காங்கிரஸுடம் திமுக கூட்டணி வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஆனால் பரஸ்பர உணர்வோடு தே.ஜ. கூட்டணி இணைந்துள்ளதாகவும், நாங்கள் இணைந்து மீண்டும் அற்புதமான ஆட்சியை அமைப்போம் என்று தெரிவித்துள்ளதோடு, நான்கில் ஒருபங்கு அறிவிப்புகள் கூட தற்போதுவரை திமுகவால் நிறைவேற்றப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் அதிமுக செய்தது பொற்கால ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரே கொள்கையின் கீழ் கூட்டணியில் இணைந்துள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், காங்கிரஸின் கொள்கையும், திமுகவின் கொள்கையும் ஒன்றா..? திமுகவும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக என்றால் குடும்பக் கட்சி என்று பொருள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது இயல்பு. திமுகவை விரட்டத்தான் இந்த தேசிய ஜனநாயக கூட்டணி என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அத்துடன், அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. மோசமான, கையாலாகத அரசு திமுக அரசு. அந்த அரசை அகற்றுவதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி. இதுதான் கருணாநிதி குடும்பத்தின் கடைசித் தேர்தல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், விவசாய நிலங்களை அபகரிக்கும் விதமாக மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தது மு.க. ஸ்டாலின் அரசு. அந்த விளைநிலங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவந்தது எங்கள் ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், காவிரி குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம் என்றும், அதனை முடக்கியது விடியா திமுக அரசு என்று சுட்டிக்காட்டியதோடு, அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும், காவிரி திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS asks if Congresss policy and DMK's policy are the same


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->