மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 'பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரச்சாரத்தில் பேசிய வசனங்கள் மறந்து போய்விட்டதா..?' தமிழக முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி..!
Edappadi Palaniswami asks the Tamil Nadu Chief Minister if the promises made during the election campaign regarding womens safety have been forgotten
''தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்''என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்வி எழுப்பி, முதலமைச்சர் விஜய், கடந்த மார்ச் மாதம் 12-ஆம் தேதி பதிவிட்ட எக்ஸ் பதிவின் படத்தை வைத்து இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
''விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami asks the Tamil Nadu Chief Minister if the promises made during the election campaign regarding womens safety have been forgotten