விடியல் அரசுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு சிறப்பு பரிசு.. சொத்து வரி உயர்வு.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!!
edappadi palanisamy tweet for property tax
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசினால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனையின் பேரில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் பரப்பளவிற்கு தகுந்தவாறு சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25% மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1200 சதுர அடி கட்டிடங்களுக்கு 50 சதவீத வரியும், 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீத வரியும், 1801-ம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு 100 சதவீத வரியும் வரி உயர்வு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.
இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
edappadi palanisamy tweet for property tax