டெல்லி தீ விபத்து.. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்து உள்ளனர். பல வணிக வளாகங்கள் இயங்கிவரும் அந்த நான்கு மாடி கட்டிட வளாகத்தில் மேல்தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. 

உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில், டெல்லி தீ விபத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டையே உலுக்கியுள்ள டெல்லி வணிகவளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன்,சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy condolences for delhi fire accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->