டாஸ்மாக் ஊழல்! மீண்டும் அமலாக்கத்துறை பிடியில் விசாகன்!
ED Raid TASMAC
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று நடத்திய சோதனைப் பின்னணியில், அவரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இரவு நேரத்திலும் நடைபெற்ற இந்த விசாரணை முடிவில், விசாகன் அலுவலகத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்துள்ளனர். இதற்கிடையில், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, மின்வாரியத்தின் முன்னாள் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதனின் வீடு மற்றும் அலுவலகம், சூளைமேட்டில் உள்ள அவரது சொந்த வீடு, அண்ணா நகர் ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு என பல இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விசாகனை மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடந்த நிலையில், தொடர்ந்து நடைபெறும் சோதனையின் கீழ் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.