மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது - அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மீனவர்கள் 20 கைது கண்டிக்கத்தக்கது : மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை சிங்களப் படையினர்  தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.

கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 14 பேர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.  அதற்குள்ளாக 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்திய இறையான்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதன் மூலமாகவும்,  அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதன் மூலமாகவும் வாழ்வாதாரங்களை முடக்கத் துடிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 2 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன.

மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது.  இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.  இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to Sri Lanka Navy 29112022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->