"திமுகவின் முடிவுரை தொடங்கிவிட்டது" - மதுராந்தகத்தில் பிரதமர் மோடி ஆவேச முழக்கம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிரடிப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி (EPS) உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த மேடையில், திமுக அரசுக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

உரையின் முக்கிய அம்சங்கள்:

திமுகவின் "CMC" ஆட்சி: திமுக அரசு என்பது ஊழல் (Corruption), மாஃபியா (Mafia), மற்றும் குற்றக் கும்பல்கள் (Crime) நிறைந்த 'CMC' ஆட்சி என்று பிரதமர் சாடினார். மக்கள் இவர்களை வேரோடு கிள்ளி எறிய முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

நீங்கள் திமுகவிற்கு வாய்ப்பளித்தீர்கள், ஆனால் அவர்கள் உங்களுக்குத் துரோகம் இழைத்தார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அள்ளித் தெளிக்கப்பட்டவை, ஆனால் பணிகள் பூஜ்யம். திமுக ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது; தமிழக மக்களுக்கு அவர்கள் செய்ததெல்லாம் துரோகம் மட்டுமே என மோடி குற்றம் சாட்டினார்.

இரட்டை என்ஜின் அரசு: "தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இந்தத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது இப்போது உறுதியாகிவிட்டது," என்று அவர் நம்பிக்கையூட்டினார்.

மக்களின் செய்தி: திரண்டுள்ள மக்கள் வெள்ளம், தமிழ்நாடு ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதை உலகிற்கு உணர்த்துகிறது எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான இன்று, அவரது வீரத்தையும், எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டையும் நினைவுகூர்ந்த பிரதமர், 'ஏரி காத்த ராமர்' அருளால் தமிழகம் முன்னேறும் எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMKs Countdown has Started PM Modi Sounds Poll Bugle in Maduranthakam


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->