அமெரிக்கா போகணும்! அனுமதினி கொடுங்க - நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி சகோதரர்! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைக் சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் நேரில் ஆஜராகிய நிலையில், அசோக் குமார் சார்பில், “இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல மருத்துவ அனுமதி வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதி, அமலாக்கத் துறைக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, அச்சார்ந்த மனுவின் விசாரணையை ஜூன் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். பிரதான வழக்கின் விசாரணை ஜூலை 8-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Senthil balaji bro usa medical visit


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->