மதுரை எய்ம்ஸ். கட்டிடத்திற்கு தேதி குறித்த திமுக எம்.பி.! திட்டவட்டமாக கடிதம்.! - Seithipunal
Seithipunal


பாஜக முக்கிய தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்து இருந்த நிலையில் சர்ச்சை ஏற்பட்டது. 

திமுகவின் கூட்டணி கட்சி எம்.பி.யான வெங்கடேசன் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திற்கு சென்ற போது அங்கே காலி மனையாக இருந்ததை புகைப்படம் எடுத்து 95 சதவீதம் வேலை முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என்று தெரிவித்தார்.

விளம்பர பிரியர் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கு இதுக்கூட புரியாதா.. வெங்கடேசனுக்கு  பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி.! - Seithipunal

அதுபோல திமுக உடன் பிறப்பு ஒருவர் மருத்துவமனையை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். சமீபத்தில் ஜெ.பி.நட்டாவின் தொகுதியில் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து அக்டோபர் ஐந்தாம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிலையில், 2026 அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp letter to mansook mandevya 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->