சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 சீட் வென்றால், மத்தியில் ஆட்சி மாற்றம் - திமுக ஆ.ராசா ஆருடம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், "மத்திய அரசை தற்போது சிலர் கட்டுப்படுத்தி ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தையே தங்கள் வசப்படுத்தி விட்டார்கள். 

நான் 30 வருடங்களாக எம்.பி.யாக இருக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? PL2, PLC என்றால் கூட தெரியாது.

முன்பு தேர்தல் ஆணையம் நியாயமான அமைப்பாக இருந்தது. வாக்காளர் பட்டியல், சின்ன ஒதுக்கீடு, பூத் ஸ்லிப் உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படையாக நடந்தன. அதனால், நாங்களும் நம்பிக்கையுடன் தேர்தல்களை சந்தித்தோம். ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் itself திருடர்களால் நிரம்பி விட்டது.

முன்பு 10 பேர் திருடர்கள் இருந்தால், இன்று தேர்தல் ஆணையமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் நாமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. திருட்டு முறைகள் மூலம் அதிகாரத்தை பிடிக்க வேண்டுமென்றால், அது தமிழ்நாட்டுக்குப் பொருத்தமல்ல. மக்களின் நம்பிக்கையால் மட்டுமே ஆட்சிக்கு வர வேண்டும்.

இது சாதாரண மாநிலத் தேர்தல் அல்ல; இது இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல். மத்திய அரசிற்கு தற்போது பெரும்பான்மை தளர்ந்துள்ளது. தமிழகத்தில் 150 முதல் 200 இடங்களை நாம் கைப்பற்றினால், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறாமலேயே மத்திய ஆட்சியில் மாற்றம் ஏற்படும்” என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP A rasa 2026 election


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->