கட்சி ஆரம்பித்ததும் முதலமைச்சர் ஆசையா? விஜயை மறைமுகமாக விமர்சித்த முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் 75வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த துணை முதலமைச்சர் உதயநிதியை “கொள்கை இளவல்” என பாராட்டியவர், அறிவுத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது: திருவள்ளுவர் கோட்டம் இன்று திராவிடக் கூட்டமாக மாறியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயத்தில் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பேரியக்கமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க.வை தொடங்கியவர் அண்ணாதுரை; அதை 50 ஆண்டுகளாக கட்டியெழுப்பி காத்தவர் கலைஞர் கருணாநிதி.

அறிவொளியை பரப்புவதே தி.மு.க.வின் பிரதான நோக்கம். மக்களின் சிந்தனையை மாற்றிய மையமாக இக்கட்சி எப்போதும் செயல்பட்டுள்ளது. கட்சியை தொடங்கியதும் ஆட்சிக்கே சென்றது அல்ல; மக்கள் மனத்தில் இடம் பிடித்து வளர்ந்தது தி.மு.க.

வரலாற்றை அறியாதவர்கள் இன்று நம்மை விமர்சிக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வின் வெற்றியைப் போல சாதிக்க விரும்புவோர், அதே அளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்ட வேண்டும். தி.மு.க. ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் தனித்துவம் கொண்ட கட்சி. தி.மு.க.வைப் போல் வெற்றி பெற வேண்டும் என சிலர் கனவு காண்கிறார்கள்; ஆனால் அவர்களிடம் அதற்குத் தேவையான தன்னம்பிக்கையும் தியாக உணர்வும் இல்லை.

அறிவை வளர்த்தும், சமூக முன்னேற்றத்தை நோக்கியும் தமிழர் வாழ்வை உயர்த்திடும் இயக்கமே தி.மு.க. என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK Stalin TVK Vijay


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->