கமல் பேசியதில் தவறு இல்லை - திமுக அமைச்சர் நேரு பேட்டி! - Seithipunal
Seithipunal


அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசியபோது, கொரோனா பரவலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கையாக செயற்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

மொழிவிவகாரத்தில் கமல்ஹாசன் கூறியது தவறு அல்ல என்றும், தமிழ் மொழியிலிருந்தே தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் உருவானவை எனவும் வலியுறுத்தினார்.

மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலை எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், சேகர் பாபு பதில் அளித்துள்ளதாகவும், அரசுக்கு குறை சொல்ல வழியில்லாததால் இதுபோன்ற பேச்சுகளை அண்ணாமலை நடத்துகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தொடர்பாக வரும் 17ம் தேதி பராமரிப்பு ஒப்பந்த கூட்டம் நடைபெறும்; அதன்பின் திட்டமிட்டபடி பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister support to MNM Kamal Thug life


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->