பழைய சோறால் வந்த வினை...! முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


தென்காசியில் சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில், கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 முதியவர்கள் உயிரிழந்தனர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 8 பேர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முதியோர் இல்லத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virus caused by old rice 3 people died nursing home


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->