சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி.. விழுப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்!
International Day Against Child Labour rally Students who created awareness
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழுப்புணர்வு பேரணியில் மாணவ ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்கவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி மாணவர்கள் சார்பாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின பேரணி நடைபெற்றது.
பள்ளியில் தாளாளர் ஹென்றி அருளானந்தம், செயலர் தமயந்தி ஆகியோர் தலைமை தாங்கி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்பேரணி கொண்ட மநாயக்கன்பட்டியிலிருந்து புறப்பட்டு தேனி சாலை வழியாக வந்து ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
பேரணியில் வந்த மாணவ மாணவிகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு வந்தது பொதுமக்களை கவர்ந்தது. விழா நிறைவில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் லதா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். காவல்துறை சார்பில் ராமன், முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .பள்ளி நிர்வாகி மாத்யூ ஜோயல் தலைமையில் விழா ஏற்பாடுகளை பள்ளிஆசிரியர்கள் பூமா, ராகினி, திவ்யா, பாண்டிசெல்வி, கவிதா உள்பட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.'
English Summary
International Day Against Child Labour rally Students who created awareness