டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்; அவசரமாக தரையிறங்கிய விமானம்: பீதியில் பயணிகள்..! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் இருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடபட்டதால் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து, புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

விமானத்தில் இருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், விமானம் முழுவதும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விமானத்தின் கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், இன்று ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளமை பீதியடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi bound Air India flight makes emergency landing due to bomb threat


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->