மக்களைத் தேடிப் பயணிப்போம்.. மக்களின் குறைகளைத் தீர்ப்போம்.. தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மடல்.!!
dmk leader mk stalin letter to members
விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதி உள்ள மடலில், விமர்சனங்களை புறந்தள்ளி மக்கள் பணியை தொடர வேண்டும். மக்கள் தேடி பயணிப்போம், மக்களின் குறைகளை தீர்ப்போம். ஓய்வின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.
விமர்சனங்களை புறந்தள்ளி, ஆக்கபூர்வமான மக்கள் பணியை தொடர்ந்திட வேண்டியது நமது கடமை. நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் என்னை சர்வதியாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்தான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தேன்.
மக்களை தேடி சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்த்திடுவோம். ஓயாது உழைப்போம், நல்ல பெயர் எடுத்து, மக்களின் நற்சான்றிதழைப் பெற்றுடுவோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
dmk leader mk stalin letter to members