ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு - திமுக தலைமை விடுத்த அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் நாளை ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நாளை ( 4-ந் தேதி) ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.

நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை கனமழை பெய்யும் மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைத்து நடத்திட வேண்டும். 

அவ்வாறு ஒத்திவைக்கப்படும் பொதுக்கூட்டங்களை தங்கள் மாவட்டத்தில் கனமழை பெய்யாத நாட்களில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட பேச்சாளர்களை தொடர்புகொண்டு அந்தந்த மாவட்டக் கழக செயலாளர்களே பொதுக்கூட்டம் நடைபெறும் நாள், தேதி மற்றும் இடங்களை அறிவித்து நடத்திட வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Head Announce 04112022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->