திமுகவுக்கு தொகுதிப் பங்கீடு அழுத்தம்; அதிமுகவுக்கு பின்னடைவு: திருமாவளவன் கருத்து!
DMK Has to Accommodate Everyone in this Alliance says VCK Leader Thirumavalavan
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,.
தொகுதிப் பங்கீடு அழுத்தம்: திமுக கூட்டணியில் புதிய கட்சிகளின் வருகையால், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளைப் பகிர்ந்து அளிப்பதில் திமுக தலைமைக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திமுகவே குறைந்த இடங்களில் போட்டியிட முன்வரும்போது, விசிக-வும் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். விசிக-விற்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெளிவாகும்.
அதிமுகவுக்கு பின்னடைவு: எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அமித் ஷா மற்றும் பிரதமரைச் சந்திக்கக் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவு எனத் தெரிவித்தார். வழக்கமாகத் தில்லியிலிருந்து தலைவர்கள் ஜெயலலிதா வீட்டுக்கு வருவார்கள், ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருப்பதாக அவர் விமர்சித்தார்.
அறிவுரை: அதிமுக தனது சமூக நீதி இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கூட்டணையை அதிமுக-வே வழிநடத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டணி நலனே முக்கியம் என்பதால், தொகுதிப் பங்கீட்டில் காலதாமதம் ஏற்பட்டாலும் சுமூகமான தீர்வு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
DMK Has to Accommodate Everyone in this Alliance says VCK Leader Thirumavalavan