பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் இந்த நிலைக்கு காரணம் திமுக அரசு தான்...!-ஓபிஎஸ்
DMK government responsible state dental colleges and hospitals OPS
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,'அரசு பல் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து' அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:
அதில் அவர் தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.இதுகுறித்து இந்திய பல் மருத்துவ கவுன்சில்,' இவற்றில், கடலூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததன் காரணமாக, அந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது' என விளக்கம் கேட்டு அறிவிப்பினை அனுப்பியுள்ளது.
இந்த நிலைமைக்கு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தள்ளப்பட்டதற்குக் காரணம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் ஒரு பல் மருத்துவர் கூட நியமனம் செய்யப்படாததும், பதவி உயர்வு வழங்கப்படாததும்தான்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைந்து நிரப்பவும், ஆட் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்தவும், பல் மருத்துவர்களுக்கான பதவி உயர்வை அவ்வப்போது அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இது தற்போது அனைவரின் கவனத்தையும் வெகுவாக பெற்றுள்ளது.இதற்கு தமிழக அரசு பதிலளிக்குமா? என்று எதிர்பார்க்க படுகிறது.
English Summary
DMK government responsible state dental colleges and hospitals OPS