அப்படியா!!! திமுக- தேமுதிக கூட்டணியா? கே.என் நேரு கொடுத்த தக்க பதில் என்ன?
DMK DMDK alliance What was appropriate response given by KN Nehru
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு பரபரப்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்ததற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
English Summary
DMK DMDK alliance What was appropriate response given by KN Nehru