மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.. தேமுதிக அறிவிப்பு.!!
dmdk protest against govt
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தேமுதிக போராட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தே.மு.தி.க. தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
English Summary
dmdk protest against govt