கனவுகளோடு சென்ற மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரை தந்துள்ளது!- உதயநிதி
deaths children who went with their dreams have brought immense sorrow Udhayanidhi
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ,"கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
deaths children who went with their dreams have brought immense sorrow Udhayanidhi