சேலத்தில் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுப்பட்ட தவெகவினர்; விளக்கமளித்துள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார்.. - Seithipunal
Seithipunal


சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 37 வயது நபர், மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த தவெக-வினர் மயங்கி விழுந்தவரை அங்கிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது

தவெக கூட்டத்தில் உயிரிழந்தது மற்றும் சேலம் மருத்துவமனை வளாகத்தில் நிருபர்களுடன் த.வெ.க.வினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் த.வெ.க. கட்சியின இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தமடைந்தோம். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் இருந்து கேள்விப்பட்டோம். நாங்கள் அனைத்து முதலுதவிகளையும் வழங்கி, எங்கள் ஆம்புலன்ஸையும் அனுப்பினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் காலமானார். இந்த இழப்புக்கு நாங்கள் வருத்தப்படுகிறோம். எங்கள் பணியாளர்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், கூட்டத்திற்கு 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும், அப்போதும், அதை விடக் குறைவாகவே அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தனர். பல மினி-கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர நிலைக்காக ஒதுக்கப்பட்டிருந்தன என்று கூறியுள்ளார். 

,மேலும், எங்களுக்கு மதியம் 12 மணி முதல் 03 மணி வரை அனுமதி இருந்ததாகவும், எங்கள் தலைவரின் உரைக்குப் பிறகு, மதியம் 1:10 மணிக்கு நிகழ்ச்சியை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், பொது பாதுகாப்பு குறித்து நாங்கள் நிச்சயமாக மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசுகையில் அவர் தெரிவித்துள்ளதாவது; சேலத்தில் நிருபர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதில் இருந்து, சேலத்தில் சிறிய தவறான புரிதல் ஏற்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அப்படி நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நயினார் நாகேந்திரன் த.வெ.க.-வின் பலத்தை அறிவார் என்றும், கடந்த ஒரு வருடமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் தனது சகாக்களிடம் அவர் கேட்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் எங்கள் பலத்தை அறிந்திருப்பதால், ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தங்கள் கூட்டணியில் சேர எங்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரே போட்டி த.வெ.க.-வுக்கும் தி.மு.க.-வுக்கும் இடையில்தான் என்று தெளிவாகக் கூறியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் களத்தில் இல்லை, மக்கள் ஏற்கனவே, அவர்களை நிராகரித்து விட்டனர். இந்தத் தேர்தல் நிச்சயமாக த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையேயான தேர்தல். இந்த விஷயத்தில் நாங்கள் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை புறக்கணிக்கிறோம் என்று  த.வெ.க. கட்சியின இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CTR Nirmal Kumar explains the clash between the TVKs and journalists in Salem


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->