அடையாளம்! நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம்,உத்வேகம்...! - மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி, உலகம் முழுக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று ''உலக சுற்றுச்சூழல் தினம்'' கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.இந்த நிலையில், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி:

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்பக்கத்தில் பதிவு குறிப்பிட்டதாவது, "1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் அவற்றை இன்று நட்டு வைத்துள்ளேன் இவை, நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்று பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

courage and inspiration of our nations women power Prime Minister Modi plants a tree


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->