வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் ராமசுப்பு.. காங்கிரஸார் நிம்மதி.!!
Congress Ramasubbu withdraw his l nomination
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் நெல்லை தொகுதியும் அடக்கம். நெல்லை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக நீடித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசுப்பு சுயேச்சை வேட்பாளராக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உட்கட்சி பூசல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனை அடுத்து ராமசுப்புவிடம் சமாதான பேச்சில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி வேட்பு மனைவை வாபஸ் பெறுமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட ராமசுப்பு தனது வேட்பு மனுவை தற்போது வாபஸ் பெற்றுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary
Congress Ramasubbu withdraw his l nomination