வாக்கு திருட்டு: இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கையெழுத்து இயக்க போராட்டம்..! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றை குறிப்பிட்டு, வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறி இந்திய தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., இன்று தொடங்கி வைத்தார். 

வாக்கு திருட்டை நிறுத்தக்கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் குழித்துறை சந்திப்பில் நடத்தப்பட்டுள்ளது. இதில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கியதோடு, கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு ராஜேஷ்குமார் தொடங்கி வைத்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், ஜவாகர் பால்மஞ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், குமரி மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவி சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் அருள்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஜோஸ்லால், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான் குழித்துறை நகர தலைவர் வக்கீல் சுரேஷ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress movement protests by signing petitions condemning the Election Commission of India


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->