மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி: அறிவிக்கப்படாத அவசரநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
Congress alleges that there is an undeclared emergency during Modi 11 year rule
பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியில் அறிவிக்கப்படாத அவரச நிலை நிலவுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 140 கோடி மக்களில் ஒவ்வொரு பிரிவு மக்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நல்ல காலம் பிறக்கப்போவதாக உறுதியளித்து பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் உண்மையில் மக்களுக்கு அது கனவாகவே மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் அளித்த மிகப்பெரிய வாக்குறுதிகள் எல்லாம் வெற்று அறிக்கைகளாவே உள்ளன என்றும், ஆண்டுக்கு 02 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர் என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் make in india தோல்வி வெளிநாட்டு கொள்கையில் தோல்வி கார்கே பாஜக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், அரசியலமைப்பு தூண்கள் மீது ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் நடத்துவதாகவும், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய தன்னாட்சி நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்துடன், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
Congress alleges that there is an undeclared emergency during Modi 11 year rule