முறைகேடு புகார்! தி.மு.க.விலிருந்து பொன்.வசந்த் நீக்கம்!
Complaints of irregularities Pon Vasant removed from DMK
மதுரை மாவட்டத்தில் மேயராக இருப்பவர் இந்திராணி.அவரின் கணவர் பொன்.வசந்த் என்பவர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தி.மு.க.கட்சியிலிருந்து பொன்.வசந்தை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு காரணமாக தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதன் அடிப்படையில், உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் பொன்.வசந்தை தற்காலிகமாக நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும், மதுரை மேயரின் கணவரான பொன்.வசந்த் மதுரை மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் அதிகளவில் தலையிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் துவக்கத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து, தற்போது மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதியுடன் இணைந்து அவரது ஆதரவில் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு முறைகேடான செயல்களை பொன்.வசந்த் ஈடுபட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Complaints of irregularities Pon Vasant removed from DMK