"மதிமுக அலுவலக பூட்டை உடைத்து திருட்டு": கடையநல்லூர் எம்.எல்.ஏ தி.மு.ராசேந்திரன் மீது எஸ்பியிடம் புகார்!
Complaint Lodged Against Expelled Kadayanallur MLA TM Rajendran for Alleged Break-In at Tenkasi MDMK Office
எம்.எல்.ஏ மீது புகார்: தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள மதிமுக மாவட்ட அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றதாகக் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ தி.மு.ராசேந்திரன் மீது மதிமுக மாவட்டப் பொருளாளர் அ.சுப்பையா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
காணாமல் போன பொருட்கள்: கடந்த செப்டம்பர் 13 அன்று அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டுப் புதிய பூட்டு போடப்பட்டிருந்ததாகவும், அங்கிருந்த வைகோ, அண்ணா, பெரியார் படங்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் மற்றும் கொடிக்கம்பம் உள்ளிட்ட பொருட்கள் எம்.எல்.ஏ ராசேந்திரனால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கம் பின்னணி: கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற ராசேந்திரன், தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறிய போதும் கட்சித் தலைமை உத்தரவை மீறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சட்டப்படி நடவடிக்கை கோரிக்கை: கட்சியின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டதோடு, மதிமுக மாவட்ட அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து கட்சிச் சொத்துக்களைச் சேதப்படுத்தி எடுத்துச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் தி.மு.ராசேந்திரன் மீது உரிய விசாரணை நடத்திச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Complaint Lodged Against Expelled Kadayanallur MLA TM Rajendran for Alleged Break-In at Tenkasi MDMK Office