அமைச்சர் சேகர்பாபு என்னை அதிகம் வேலை வாங்குகிறார்..!! திருமண விழாவில் மு.க ஸ்டாலின் பேச்சு..!!
CM Stalin spoke Minister Sekarbabu hires me a lot
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தமிழகத்தில் 216 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் "இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பற்றி பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அவர் ஒரு செயல்பாபு என்று பலமுறை குறிப்பிட்டு காட்டி இருக்கிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் ஒரு முதலமைச்சர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள்.
ஆனால் அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரை வேலை வாங்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். வேலை வாங்குகிறார் என்றால் ஏதோ தேவையில்லாத வேலை அல்ல. நாட்டிற்கு பயன்படக்கூடிய வேலை மக்களுக்கு பயன்படக்கூடிய வேலை. அப்படிப்பட்ட சிறப்புக்குரிய துறையை பெற்றுக் கொண்டு அவர் பல்வேறு பணிகளை பல்வேறு திட்டங்களை சாதனைகளை செய்து வருகிறார்.
இதுவரை தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே இந்து சமய அறநிலைத்துறை இப்படிப்பட்ட ஒரு சாதனை எங்காவது நடந்திருக்கிறதா என்று கேட்டால் தைரியமாக சொல்லலாம் இல்லை என்று. இது போன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கிறது" என அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டி பேசி உள்ளார்.
English Summary
CM Stalin spoke Minister Sekarbabu hires me a lot