எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது; அதனால் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்; முதலமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில், விழா நடைபெற்றது.  அய்யன் வள்ளுவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அங்கு புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து வைத்து அவர் பேசுகையில், எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான், தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்றும் பாராட்டுக்காக, இங்கு வரவில்லை. அன்புக்காக வந்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், கவனிப்பார் இல்லாமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம் என்றும், சென்னையின் மையத்தில் 1,400 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அய்யன் வள்ளுவன் என்ற இந்த அரங்கத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் இதை செய்யவில்லை, உள்ளார்ந்து செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறு மலர் பள்ளி குழந்தைகளின் வாழ்த்தை, புன்னகையாகப் பெறும்போது தான் அந்த நாளே எனக்கு முழுமையடையும் என்றும், இன்று நேற்று அல்ல, 42 ஆண்டுகளாக, நான் உங்களில் ஒருவன் என்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று 
முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister says those who believe that social justice should not be available to everyone are attacking the DMK government


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->