மகிழ்ச்சி! மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள் கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்...!
Chief Minister give new textbooks and uniforms students
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும், பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மனமார வரவேற்றனர்.

இதையடுத்து, விடுமுறைக்கு பின் பள்ளிக்கு வந்ததால் மாணவர்கள் தங்களின் விடுமுறையில் செய்தவற்றை நண்பர்களிடம் பரிமாறி மகிழ்ந்தனர்.அதன் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான முக்கிய ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் அடுத்தடுத்து செய்து வருகிறது.இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும், மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகளை வழங்கினார். இதனிடையே, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
English Summary
Chief Minister give new textbooks and uniforms students