கத்தியுடன் உள்ளே புகுந்த திமுக கதிரவன்., அடித்து நொறுக்கப்பட்ட வாக்கு எந்திரம்.! தெறித்து ஓடிய பொதுமக்கள்,! - Seithipunal
Seithipunal


சென்னை : திருவான்மியூர் வாக்குச்சாவடியில் புகுந்து வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டது தொடர்பாக, திமுக பிரமுகர் கதிரவன் உள்ளிட்ட 4 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவான்மையூர் 179 வார்டில் திமுக சார்பில் கயல்விழியும், அதிமுக சார்பில் ஜமுனா கணேசனும் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். 

இந்நிலையில், நேற்று 179 வது வார்டுக்கு உட்பட்ட ஓடைகுப்பம் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கும்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த திமுக கதிரவன் உள்ளிட்ட 5 பேர், வாக்காளர்களை மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

மேலும், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.

அங்கிருந்த வாக்கு எந்திரத்தையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கதிரவன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கதிரவன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்வதற்காக போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai oodaiukuppam election booth attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->