இந்து மத விரோத பேச்சு | ஆ ராசா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற திராவிட கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "உச்சநீதிமன்றம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? 

ஹிந்துவாக நீ இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? தீண்டத்தகாதவர்களாக இருக்க வேண்டும் என்று எத்தனை பேர் ஆசைப்படுகிறீர்கள்? இந்த கேள்வியை நீங்கள் உரக்கச் சொன்னால்தான் சனாதனத்தை முறியடிக்க முடியும்" என்று பேசி இருந்தார்.

இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஜோசப் என்பவர் சென்னை உயநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், "மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஆ.ராசா பேசியுள்ளார். திமுக எம்.பி ஆ.ராசாவின் இந்து மத வெறுப்பு பேச்சு, இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஆ ராசா மீது வழக்கு பதிய எந்த முகாந்திரமும் இல்லை என்று, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Hc Order For A Rasa Against Case


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->