ஒரு சதவிகிதம் கூட இல்லை! ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் 1.50 கோடி உறுப்பினர்களில் ஓ.பி.எஸ்.க்கு 1% கூட ஆதரவு இல்லை என்று, உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10 மணிமுதல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் வாதம் நிறுவைடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், விஜயநாராயண் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்துள்ளனர்.

அதில், "உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத்தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படாது என உத்தரவாதம் அளித்தோம். அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த உத்தரவாதம் அமலில் இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்களின் மூலமே நடத்தப்படுகிறது. 1.50 கோடி உறுப்பினர்களில் ஓ.பி.எஸ்.க்கு 1% கூட ஆதரவு இல்லை.

தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓ.பி.எஸ். நேரடியாக வழக்கு தொடரவில்லை; வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை.

பொதுக்குழு கூட்ட தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு தடை கூற முடியாது. உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே, பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடரவில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டு, எட்டு மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட இந்த மூவரும் தான் வழக்கை தொடர்ந்துள்ளனர். 

அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது." என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டியது.

ஓபிஎஸ் தரப்பின் பரபரப்பு வாதம் : 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC AIADMK GS case OPS vs EPS 12pm


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->