#சென்னை || பேருந்து நிலையத்தில்., பொதுமக்கள் மத்தியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர், சௌந்தரராஜன். 57 வயதான இவர் ஜோஸ் கடை நடத்தி வருகிறார். மேலும், பிராட்வே பகுதியில் 59வது வட்டத்தின் திமுக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே சௌந்தரராஜன் வந்து கொண்டு இருந்தபோது, 4 மேற்பட்ட மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அவரை மடக்கிப் பிடித்து, சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

பரபரப்பாக காணப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்தே இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி, திமுக பிரமுகர் சௌந்தராஜன்-க்கும், அதிமுக பிரமுகர் கணேசன் என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பிரச்சினை ஏற்பட்டு, இதனால் கைகலப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கொலைச் சம்பவத்திற்கும், கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai dmk member sowndarrajan murder


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->