சென்னையில் சி.பி.ஐ. ரெய்டு! - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று மூன்று இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர். 

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், மற்றும் மத்திய அரசு முன்னாள் அதிகாரிகளின் வீடு அலுவலகங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

ராயப்பேட்டையில் தனியார் நிறுவன மேலாளர் சேகரின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

மயிலாப்பூரில் ஓய்வு பெற்ற துறைமுக இணை இயக்குனர் புகழேந்தியின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.  

அயப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.  

தமிழக போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மூன்று இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகள் எந்த வழக்கின் தொடர்பாக நடத்தப்பட்டன, முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காகச் செய்யப்பட்டதா என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBI Raid IN Chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->