இடைத்தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியில் வெற்றி!
By Poll result BJP AAP
நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 23) நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.
ஜனவரி 19 அன்று நடைபெற்ற காதி மற்றும் விசாவதர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளன.
காதி தொகுதியில், பாஜகவின் ராஜேந்திர குமார் 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
விசாவதர் தொகுதியில், ஆம் ஆத்மியின் இத்தாலியா கோபால் 17,554 வாக்குகள் முன்னிலையில் வெற்றியடைந்தார்.
பஞ்சாப்:
லூதியானா மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 10,637 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். பாஜக இங்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கேரளா:
நிலம்பூர் தொகுதியை காங்கிரஸ் வெற்றிகொண்டுள்ளது.
மேற்குவங்கம்:
காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தற்போதைய முன்னிலை நிலைபோன்று தொடருமானால், வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என தெரிகிறது.