நகர்ப்புற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக இன்று ஆலோசனை- பாஜக தலைவர் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக சார்பில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. மனுத்தாக்கல் முடிவு தேதி பிப்ரவரி 4ம் ஆகும். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5-ம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக உடனான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP discuss urban local election


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->