திமுக அரசின் உண்மை முகம் சாதிய வன்மம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது - பாஜக அண்ணாமலை.!
BJP Annamalai speech about thiruvallur chair issue
ஈகுவார் பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சமா.?என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார் பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணன் அவர்களுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்.
அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மட்டுமின்றி அங்கு வந்திருந்த திமுகவினருக்கு கூட இருக்கை வழங்கப்பட்டது. ஆனால், அரசு பிரதிநிதி ஒருவருக்கு இருக்கை இல்லை.
போகும் இடமெல்லாம் சமூக நீதி, சமத்துவம் என தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத் திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சரின் பதில் என்ன.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Annamalai speech about thiruvallur chair issue