நவ. 19-ஆம் தேதி கோவைக்கு பிரதமர் மோடி: அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
BJP Annamalai Kovai PM Modi visie DMK Mk Stalin
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 19-ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் வருகை:
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ஆம் தேதி கோவைக்கு வருகை தரவுள்ளார். அவர் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு, 50-க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். விவசாயத்திற்காகப் பிரதமர் பிரத்யேகமாக நேரத்தை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார். தமிழக அரசு விவசாயத்திற்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டம்-ஒழுங்கு விமர்சனம்:
தமிழகத்தில் சமூக விரோதச் செயல்களும் குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் கூறிய அண்ணாமலை, தி.மு.க. அரசு காவல்துறையைக் கையாள்வதில் தோல்வியடைந்துவிட்டதாகவும், முதலமைச்சர் காவல்துறையை இன்னும் சிறப்பாகக் கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்மையில் நடந்த கோவை கல்லூரி மாணவி சம்பவத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
தொழில் குறித்த விளக்கம்:
கர்நாடகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் தொழில்முறையாகச் செய்கிறேன். எந்தத் தொழிலும் செய்ய எனக்கு உரிமை உள்ளது. நியாயமான வழியில் சம்பாதித்து அரசியல் செய்கிறேன். நான் சாராய ஆலை நடத்தவில்லை. டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும்,” என்று தெரிவித்தார்.
English Summary
BJP Annamalai Kovai PM Modi visie DMK Mk Stalin