சனாதன சர்ச்சை || பிப்.13ல் நேரில் ஆஜராக... உதயநிதிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதன தர்மத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்து மதம் வேறு இல்லை சனாதன தர்மம் வேறு இல்லை என அமைச்சர் உதயநிதிக்கு எதிராக குரல் எழுப்பிய இந்து அமைப்பினர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு,திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டவர் மீது புகார் அளித்திருந்தனர்.

அந்த வகையில் பீகார் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பீகார் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar special court order udhayanithi appear in court


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->