மூளை நரம்புகளில் பாதிப்பு., பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலைமை.! வெளியான பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

பட்டிமன்றம் என்றால் சாலமன் பாப்பையா முதலில் அனைவரும் நினைவுக்கு வருவார். அவருக்கு அடுத்தபடியாக பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார். அவரின் பேச்சு திறமைக்கும், நகைச்சுவை தன்மைக்கும் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளியான முதல் தகவலின்படி, பாரதி பாஸ்கருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பாரதி பாஸ்கருக்கு மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பாரதி பாஸ்கரின் உறவினர் ஒருவர் அளித்துள்ள தகவலின் படி, அவருக்கு அறுவை சிகிச்சை ஏதும் நடைபெறவில்லை. இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருப்பார். பின்னர் வீடு திரும்பிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை. 

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது , அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bharathi basker health issue


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->