பிரதமர் மோடி பாகிஸ்தானை, அந்த நாட்டு மக்களுக்காக மன்னித்துள்ளார்: அமைதியா..? போரா..? அவர்கள் கையில்தான் உள்ளது; அண்ணாமலை..!
Annamalai says Prime Minister Modi has forgiven Pakistan for the sake of the people of that country
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் வகையில் பா.ஜ., சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இன்று மூவர்ண கொடி (தேசிய கொடி) யாத்திரை நடைபெற்றது. இன்று திருப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் 'தேச உணர்வோடு இருங்கள், இல்லையென்றால் எல்லோரும் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள். அவ்வளவுதான், வேற ஒண்ணும் இல்லை என்று ஆவேசமாக பேசினார். இவரை தொடர்ந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

"பாகிஸ்தானுக்கான தண்ணீரை நிறுத்திவிட்டோம். எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு மக்களுக்காக பிரதமர் இந்த முறை மன்னித்திருக்கிறார். அமைதியா..? போரா..? எதை விரும்புகிறது என்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது." என்று பேசினார்.
English Summary
Annamalai says Prime Minister Modi has forgiven Pakistan for the sake of the people of that country