இந்த நாட்களில் பிரசாரத்திற்கு வரவே பயமாக இருக்குது... பரபரப்பு கிளப்பிய அண்ணாமலை.!   - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவரும் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, பல்லடம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது, செல்லும் வழியில் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அண்ணாமலை அதிர்ச்சி அடைந்து ஞாயிற்றுக்கிழமை என்றாலே இப்படித்தான். 

இதனால் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்ய பயமாக உள்ளது. இதற்கெல்லாம் டாஸ்மாக் கடை தான் காரணம். எனவே டாஸ்மாக் கடைகளை மூடினால் தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். 

அதற்காக நீங்கள் பா.ஜ.கவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்கள் மத்தியில் பேசி வாக்குகளை சேகரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai campaign talk issue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->