நாங்க "5,000 வழிபாட்டு தலங்களை" சுத்தம் செய்ய போறோம்.!! - அண்ணாமலை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் குமரகுரு தாசர் கோவிலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில்"அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி பகவான் ஸ்ரீ ராமரின் திருவுரு சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து,

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து இன்றைய தினம் காலை சென்னை திருவான்மையூரில் உள்ள பாம்பன் சுவாமி திருக்கோவிலில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்டோம்.

 

இன்று முதல்வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பாஜக சார்பில் தமிழக முழுவதும் உள்ள கோவில்கள் தேவாலயங்கள் மசூதிகள் என 5000 வழிபாட்டு தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai announced 5000 place clean


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->