அமமுகவின் முக்கிய நிர்வாகி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு.!!
ammk member removal for party post
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகி இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டி டி வி தினகரன் வெளியேற்றப்பட்டதை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டது. ஆர். கே. நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது. இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.
தற்போது அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமமுக கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக டி டி வி தினகரனும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அமமுகவினர் அதிமுக மற்றும் திமுகவில் இணைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகானந்தம் என்பவர் பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
English Summary
ammk member removal for party post