அதிமுக பக்கம் சாய்கிறாரா அமமுக துணை பொது செயலாளர்.? அவரே வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தவர் ரெங்கசாமி. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது.  

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் வாக்களித்தனர். அதையடுத்து, அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் ரெங்கசாமியும் ஒருவர். டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்படவே தினகரன் தனியாக சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். 

அதன்பிறகு, அமமுக துணைப் பொதுச் செயலாளராக ரெங்கசாமி நியமிக்கப்பட்டார். தற்போது, டிடிவி தினகரன் அணியில் ரெங்கசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அதிமுகவில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து ரெங்கசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தீவிர விசுவாசியாக நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும்,போராளியாக தியாகத் தலைவி சின்னம்மா மற்றும் மக்கள் செல்வன் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அவர்களின் பின்னால் உணர்வோடு பணியாற்றி வரும் என்னை அதிமுக பக்கம் சேர்ந்து விடுவார் என உண்மைக்கு புறம்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை மறுப்பதோடு செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk deputy general secretary report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->