அமித் ஷா மதுரை வருகை! சந்திக்கப்போகும் அரசியல் புள்ளிகள்! பாதுகாப்பு பணி தீவிரம்! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக முக்கிய கட்சிகள் தற்போதே களத்தில் இறங்கத் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எதிர் முனையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்குடன் முழு சக்தியுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

பா.ஜ.க.வும் இந்தத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க திட்டமிட்டு அதிமுகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி விகிதத்தில் முன்னேறிய பாஜக, இந்த முறை அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சிறப்பு விமானத்தில் மதுரைக்கு வருகிறார். 

நாளை காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, மதியம் 3 மணிக்கு ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் தொகுதி நிலவரங்கள், வெற்றிச் சாத்தியம், தேர்தல் யோசனைகள் குறித்து அமித்ஷா விவாதிக்க உள்ளார். மேலும் கூட்டணி தொடர்பாகவும் சில அரசியல் புள்ளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷா வருகையை முன்னிட்டு விமான நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டும், 5 அடுக்கு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah BJP madurai ADMK DMK


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->